states

img

திருப்பதியில் லாரி மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

திருப்பதியில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில்  4பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திருப்பதி அருகே சந்திரகிர மண்டலம் என்ற பகுதியில் ஐதே பள்ளியில் வேகமாக வந்த கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  கார் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டது. இதில் காரில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.